தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமிக்கு
சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் நேரில் பாராட்டு!!
தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி, மற்றும் சப்பர பேரணி கமிட்டி இணைந்து நடத்திய தசரா திருநாள் அனைத்து அம்பாள்களின் அருட் சப்பர பேரணி மாவிளக்கு ஊர்வலம் கடந்த 7ம் தேதி தூத்துக்குடியில் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதற்கு முன்னதாக இந்து முன்னணி சார்பில் சப்பரம் வீதி உலா வரும் தூத்துக்குடி மாநகர பகுதிகளில் மாநகராட்சி சார்பில் தூய்மை பணி மற்றும் சாலை சீரமைப்பு சப்பரம் வந்து செல்வதற்கு வசதியாக சாலையோரங்களில் இருந்த மரக்கிளைகளை அகற்றி தருமாறு இந்து முன்னணி சார்பில் மாநகராட்சி மேயரிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றி தரும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி மாநகராட்சி அதிகாரிகளுடன் நேரடியாக சம்பந்தப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சரி செய்து கொடுக்க உத்தரவிட்டார் இந்துகளின் முக்கிய
நிகழ்ச்சியாக கருதப்படும் தசரா விழா நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்ச்சியான சப்பரப் பேரணி வீதி உலா வரும் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கும், ஆன்மீக வாதிகளுக்கும், எந்தவித பாதிப்பின்றி சப்பர பேரணி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு ஏதுவாக முன்னேற்பாடு பணிகளை செய்து கொடுத்த மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை பாராட்டும் வகையில் மாநகராட்சி அலுவலகத்தில் சிவன் கோவில் தலைமை அர்ச்சகர் செல்வம்பட்டர், சப்பர பேரணி கமிட்டி தலைவர் தனபாலன், அமைப்பாளர் சிவக்குமார் பொருளாளர் இசக்கி முத்துக்குமார், பாலசரஸ்வதி, சிட்பன்ட்ஸ் பாலு, கவின் சண்முகம், ஆகியோர் இந்து அமைப்புகளின் சார்பில் சால்வை அணிவித்து பிரசாதம் வழங்கி தங்களது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்தனர். இனிவரும் காலங்களில் இது போன்ற இந்து நிகழ்ச்சிகளுக்கு உதவிட வேண்டும் என்று இவர்கள் கோரிக்கை வைத்தனர். தூத்துக்குடி மாநகரில் நடைபெறும் அனைத்து மதம் சார்ந்த நிகழ்ச்சி விழாக் காலங்களிலும் பொதுமக்களின் நன்மைகள் கருதி இது போன்ற பணிகளை செய்து கொடுக்க தான் தயாராக இருப்பதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
செய்தி தொகுப்பு
எம்.ஆத்தி முத்து
போலீஸ் செய்தி
நியூஸ்

