நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் அண்ணல்நபி அவர்களின் உதயதின விழா
மீலாதுநபி விழா
நாகப்பட்டினம் அக் 10
நாகப்பட்டினத்தை அடுத்த நாகூரில் நடைபெற்ற மீலாது நபி விழாவில் நாகூர் சித்திக் சேவைக் குழுமம்- நாகூர் நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நல சங்கம் நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத் தலைவர் D.S.R.சுபாஷ் ஆகியோருக்கு சாஹிப் ஜாதா பவுண்டேசன் சார்பில் சப்தமில்லா சாதனையாளர்கள் நற்சான்றுகள் வழங்கும் விழாவில்,சென்னை மாநகர, கூடுதல் மாநகர காவல் கண்காணிப்பாளர் திருமதி,ரெஜினா பேகம் நற்சான்று வழங்கினார்கள்நாகூர் தர்கா தலைமை அறங்காவலர் அல்ஹாஜ், டாக்டர்,S, செய்யது காமில் சாஹிப் காதிரி அவர்கள் தலைமையில், நாகூர் தர்கா ஆலோசனைக்குழு தலைவரும், தமிழ்நாடு ஹஜ் கமிட்டி உறுப்பினர், நாகூர்- நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலசங்கம் நிர்வாகியுமான,ஜனாப் ,S,செய்யது முஹம்மது கலீபா சாஹிப் முன்னிலை வகித்தனர், நாகூர்- நாகப்பட்டினம் இரயில் உபயோகிப்போர் நலசங்கம் தலைவர், S மோகன், பொருளாளர் திரு, NPS பாலா@ P, பாலகிருஷ்ணன், நாகூர் சித்திக் சேவைக் குழுமம் நிர்வாகி வேளாங்கண்ணி சமூக ஆர்வலர் அ, ஆரோக்கியசாமி ஆகியோர்கள் சேவையை பாராட்டி கௌரவிக்கப்பட்டு, நற்சான்றுகள் வழங்கப்பட்டன. நாகூர் சித்திக், மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அதன் பிறகு ,54 வது ஆண்டு ஜஸ்னே ஈத் மீலாது கமிட்டியால் நடைபெற்ற மதுரஸா பள்ளிகளைச் சார்ந்த 2500 க்கும் மேற்பட்ட சிறுவர்- சிறுமியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான பேரணியிலும் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் சென்று நாகூர் தர்காவில் நிறைவடைந்தது.போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

