தூத்துக்குடி அக் -08
மதுரையில் நடைபெறவுள்ள PMT மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் மாநில செயற்குழுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
தூத்துக்குடியை தலைமையாகக் கொண்டு இசக்கிராஜாதேவர் அவர்களின் தலைமையில் கடந்த 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட PMT அறக்கட்டளை பொதுமக்களுக்கான பிரச்சனைகளுக்காக குரல்கொடுக்கும் பொருட்டு இயக்கரீதியாக செயல்பட முடிவெடுத்து அதற்கான பூர்வாங்கபணிகளில் ஈடுபட்டு கிளைகள் முதல் ஒன்றிய,நகர,மாவட்ட,மண்டல,மாநில நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் நியமித்து முழுமையான கட்டமைப்பை உறுதிசெய்து செயல்படத் துவங்கியது, அதனடிப்படையில் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளின் ஒருமனதான தீர்மானத்துடன் தலைமைப் பொறுப்பை ஏற்கும்பொருட்டு மாநில செயற்குழுக்கூட்டமானது மதுரை ரிங்ரோடு பாண்டிகோவில் அருகில் உள்ள R.R.மஹாலில் நடைபெறஉள்ளது, இக்கூட்டத்தில் கலந்துகொள்ளும் பொருட்டு மாநில முழுவதிலிருமிருந்து நிர்வாகிகள் அனைவரும் மதுரை வரத்துவங்கியுள்ளனர்.
செயற்குழுக்கூட்டத்திற்கு PMT மக்கள் பாதுகாப்பு இயக்க மாநில பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார், தேனிமாவட்ட பொதுச்செயலாளர் மணித்தேவர் முன்னிலை வகிக்கிறார்,மாநில அமைப்பு செயலாளர் வள்ளிக்கன்னுத்தேவர் கொள்கைவிளக்கவுரையாற்றுகிறார், மாநில அமைப்பு செயலாளர் செல்லசக்திதேவர் இயக்ககட்டமைப்பு உறுதியுரையாற்றுகிறார், மாநில அமைப்பு செயலாளர் முத்துகிருஸ்ணன் இரங்கல் தீர்மானங்கள் வாசிக்கிறார்,மாநில இளைஞரணிசெயலாளர் சுந்தர்பாண்டியன் தீர்மானஉரையாற்றுகிறார், இறுதியில் மாநில அமைப்பு செயலாளர் ராஜசேகர் நன்றியுரையாற்றுகிறார், நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயக்க நிறுவனர் இசக்கிராஜாத்தேவர் தலைமையில் தலைமை இயக்க நிர்வாகிகள் செய்திருக்கின்றனர்.
மதுரையில் நாளை நடைபெறும் மிக பிரமாண்டமான செயற்குழு கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படஉள்ளதாகவும் கூறப்படுகிறது.

