நாகப்பட்டினம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்; வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்;க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து மொத்தம் 144 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் நடைபெற்ற போஷன்மா விழாவில் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை ஊட்டுவதில் நமது பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டதில் பேச்சுப்போட்டியில் வெற்றிப்பெற்ற ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.இராமையன், கோட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.முகமது சலாவுதீன், கொடியாலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, ஓவியப்போட்டியில் வெற்றிப்பெற்ற கொடியாலத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி, ஆயக்காரன்புலம்-2 ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.இராமையன், ஆவராணி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சங்கீதா போன்ற ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கேடயத்தினையும், ஊட்டச்சத்து விழாவின் போது கடலில் படகில் சென்று ஊட்டச்சத்து விழிப்புணர்வு செய்த காடம்பாடி, கோட்டை மேட்டுத்தெரு, சர் அகமது தெரு, வேதநாயக்கன் செட்டி தெரு ஆகிய அங்கன்வாடி மைய பணியாளர்களுக்கு கேடயத்தினையும், விடுபட்ட குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.



இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளார் (பொது) சு.ராமன், முன்னாள் படைவீரர் நல அலுவலக உதவி இயக்குநர் சூ.ஆயிஷா பேகம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

