தசரா முன்னிட்டு தூத்துக்குடி மாநகரில்
சப்பர வீதி உலா நிகழ்ச்சி : மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் நின்று முன்னேற்பாடு பணிகளை செய்து அசத்தல்!!
இந்து முன்னணியினர் மற்றும் ஆன்மீகவாதிகள் பாராட்டு!!!
தூத்துக்குடி,அக்,2
இந்தியாவில் பிரதிபெற்ற தசரா நிகழ்ச்சி மைசூரில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக தமிழகத்தில் இந்துக்களின் முக்கிய நிகழ்ச்சியான தசரா நிகழ்ச்சி 10 நாட்களாக நடைபெறுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாநகர் மாவட்ட இந்து முன்னணி நடத்தும் அனைத்து அம்பாள்களின் அருட் சப்பர பேரணி வரும் 7ம் தேதி தூத்துக்குடி மாநகர் பகுதியில் நடைபெறுவதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், அமைப்பாளர் சிவக்குமார், ஆகியோர் முக்கிய கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.
அவர்கள்
அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்ததாவது, நவராத்திரி தசரா திருவிழாவில் இறுதி நிகழ்வாக தூத்துக்குடி மாநகரில் உள்ள திருக்கோவில் அம்பாள்களில் அருட்சப்பரபேரணி வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெறுகிறது. அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரபேரணி 40 ஆண்டாக நடைபெறும் நிகழ்வு 7ம் தேதி மத்திய பாகம் காவல்நிலையம் அருகிலுள்ள விநாயகர் கோவிலிருந்து அனைத்து திருக்கோவில்களிலும் சப்பரபேரணி பெண்கள் கலந்து கொள்ளும் மாவிளக்கு ஊர்வலமாக வந்து சிவன்கோவில் முன்பு ரிஷப வாகனத்தில் எதிர்சேவை நிகழ்ச்சி ஆகியவை
இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பரபேரணி கமிட்டி இணைந்து நடத்துகிறது. தூத்துக்குடி
மாநகர் முக்கிய பகுதிகளில் நடைபெறும் சப்பரவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் தடையின்றி சிறப்பாக அமைவதற்கு சாலையோரங்களில் உள்ள மரங்களின் கிளைகள் மாநகராட்சி பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் மற்றும் சிவன்கோவில் பெருமாள் கோவில் இடையேயுள்ள கழிவுநீர் ஓடை பள்ளம் ஆகியவற்றை சீரமைத்து தந்து அருட்சப்பரபேரணி சிறப்பான முறையில் நடைபெற உதவிட வேண்டும். என்று மேயர் ஜெகன் பெரியசாமியிடம் அளித்த மனுவில் கூறியுள்ளனர். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் ஜெகன் பெரியசாமி
வரும் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை 3 தினங்கள் நடைபெற உள்ள சப்பர பேரணிக்கு
அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் செய்து தரப்படும் என தெரிவித்திருந்தார். இந்து முன்னணி
சார்பில் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனு மீது 2 தினங்களில் அதிரடியாக மேயர் ஜெகன் பெரியசாமி களமிறங்கி சப்பரம் வீதி உலா வரும் பகுதிகளில் நேரடியாக ஆய்வு செய்து கோரிக்கையில் தெரிவித்ததை நிறைவேற்றும் வகையில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். மேலும் சப்பர பவனி உலா வரும்
நகரில் முக்கிய பகுதிகளில் உள்ள
கழிவுநீர் ஓடை பள்ளம் ஆகியவற்றை சீரமைத்து,
சாக்கடை போகும் பகுதிகளில் பிளேட்டுகள் போட்டு மூடி அமைத்து கொடுக்க உத்தரவிட்டது மட்டுமல்லாமல் அந்தப் பகுதிகளில் தூய்மை பணிகளை துரிதப்படுத்தினார் . மேலும் சப்பர பவனி நடைபெறும் தினங்களுக்கு முன்பு அந்தப் பகுதிகளில் முழுமையான பணியை முடிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


மேயர் ஜெகன் பெரியசாமியின் இந்த அதிரடி ஆய்வின்போது பகுதி செயலாளர் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், செல்வம் பட்டர், வட்டச் செயலாளர், கங்கா ராஜேஷ், திருச்செந்தூர் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி
இந்து முன்னணி தூத்துக்குடி மாநகர் மாவட்ட தலைவர் இசக்கிமுத்துக்குமார், அமைப்பாளர் சிவக்குமார், பிரபாகர் , பொதுச் செயலாளர் லட்சிய பாதை சண்முகசுந்தரம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்
இந்து முன்னணி மற்றும் ஆன்மீகவாதிகள்
கோரிக்கை மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த மேயர் ஜெகன் பெரியசாமிக்கு
இந்து முன்னணி மற்றும் அனைத்து அம்பாள்களின் அருட்சப்பர பேரணி கமிட்டி சார்பிலும் ஆன்மிகவாதிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
செய்தி தொகுப்பு
எம். ஆத்தி முத்து
போலீஸ் செய்தி நியூஸ்

