நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதிகிராப்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி
வைத்தார்.
நாகப்பட்டினம் அக்டோபர் 2
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காதிகிராப்ட் சார்பில் அமைக்கப்பட்டுள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர் சிறப்பு விற்பனையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று (. தொடங்கி வைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்ததாவது .தேசிய தினங்களாகிய சுதந்திர தினம், குடியரசு தினம், தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின் பிறந்ததினம் மற்றும் தேசிய தலைவர்களின் நினைவு தினம் ஆகிய புனித தினங்களில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள், ஆசிரியப் பெருமக்கள் ஒவ்வெருவரும் ஒரு கதராடையாவது வாங்கி உடுத்தி நெசவாளர் குடும்பங்களின் முன்னேற்றத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.


தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் பல லட்சக்கணக்கான ஏழை, எளிய நூற்போர், நெசவாளார்களுக்கு இடையறாத வேலைவாய்ப்பினை அளிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பேருதவி செய்து வருகிறது. காந்தியடிகளின் சுதந்திர போராட்ட கால சின்னமாக திகழும் இக்கதர் ஆடையை அனைவரும் வாங்கி அணிய வேண்டியது ஒவ்வொரு இந்தியரின் தலையாய கடமையாகும்.
இந்த ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தீபாவளி சிறப்பு விற்பனைக்காக குறியீடாக ரூ. 5 இலட்சம் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கதர் பருத்தி, பட்டு, பாலியஸ்டர் ரகங்களுக்கு 30 சதவீத தள்ளுபடியும், உல்லன் ரகங்களுக்கு 20 சதவீத தள்ளுபடியம் வழங்கப்படுகிறது. மேலும் முழுவதும் சுத்தமான இலவம் பஞ்சினால் மிக நேர்த்தியாக செய்யப்பட்ட மெத்தை, தலையணை மற்றும் மெத்தை விரிப்புகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள காதிகிராப்ட் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார் முன்னதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளின்திருவுருவ சிலைக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
இவ்விழாவில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சு.ராமன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார், காதிகிராப்ட் மேலாளர்கள் முருகன் , கு.நாகராஜன் உட்பட அரசு அலுவலர்கள், சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய்
மச்சோடா.

