வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ஆம் ஆண்டு வன உயிரின வாரம்
கொண்டாடப்பட்டது.
வேதாரணியம்
அக்டோபர் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் 70 ம் ஆண்டு வன உயிரின வாரம்
02.10.2022 முதல்
08.10.2022 வரை கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு இன்று வேதாரணியம் சரகம் வன பணியாளர்களுடன் கோடியக்கரை தம்புசாமி இல்ல வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு வனங்களையும், வன உயிரினங்களையும் பேணி காப்போம் என்றும் சுற்றுச்சூழலை பேணிக்காப்போம் என்றும் அழிந்து வரும் வன உயிரினங்களை அழியாவண்ணம் பேணி காப்போம் என்றும் வன பரப்பினை 33% பசுமை படுத்துவோம் என்றும் உறுதிமொழி அனைவராலும் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்வில்
வேதாரணியம் வனச்சரக அலுவலர் பா.அயூப்கான் தலைமையில்
வனசரக காவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகப்பட்டினம் செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

