வேதாரண்யத்தில் மகாத்மா காந்தியின் பிறந்த நாளும் கர்ம வீரர் காமராஜர் நினைவு நாளைமுன்னிட்டு அவர்கள் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
வேதாரணியம் அக்டோபர் 2
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மேலவீதி ராஜாஜி பூங்கா அருகில்
மகாத்மா காந்திஜியின் 153 வது பிறந்தநாளும்
கர்மவீரர் காமராஜர் 45 வது நினைவு நாளை முன்னிட்டு அவர்கள் படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி. ராஜேந்திரன் தலைமையில்
மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.என் வாழ்க்கையே எனது செய்தி என்பார் காந்திஜி.அதுபோல வரலாற்றில் எந்த ஒரு அடுக்கிலும் தவிர்க்க முடியாத அளவுக்கு உயர்ந்த தியாக வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.அவர் கொண்ட கொள்கையில் உறுதியும் தனது விடாப்பிடியான அறப்போராட்டம் மானுடம் பேசும் கதைகளாகும்.காந்திஜி 1869 ஆம் ஆண்டு அக்டோபர் 2-ஆம் தேதி குஜராத் மாநிலம் போர்பந்தர் இல் பிறந்தார். இவர் லண்டனில் கல்வி பயின்று தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்து வந்த போதும் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட்டத்தை நடத்தினார்.தன் வாழ்நாளில் ஒடுக்குமுறை தீண்டாமை பெண் அடிமைத்தனத்தை வலுவாக எதிர்த்தார். தன்னுடைய வார்த்தைகளுக்கு இறுதிவரை உண்மையாக இருந்தவர் காந்திஜி. தேசபிதா மகாத்மா காந்தியின் பிறந்த தினமான இன்று சர்வதேச அகிம்சை தினமாக கொண்டாடப்படுகிறது. அதேபோல கர்மவீரர் காமராஜரின் நினைவு தினமான இன்று அவர் நினைவை போற்றுவோம்.

கர்மவீரர் காமராஜர் ஒன்பது ஆண்டுகள் சென்னை மாநில முதல்வராக பதவி வகித்தவர். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். கர்மவீரர் காமராஜர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி. வி .ராஜேந்திரன் பேசும்போது மகாத்மா காந்தி மற்றும் கர்மவீரர் காமராஜர் நினைவு போற்றி அவர்களின் பெருமை பற்றி பேசினார்கள்.
இந்த நிகழ்வில்
வேதாரணியம் காங்கிரஸ் நகர தலைவர் அர்ஜுனன், துணைத்தலைவர் மையா ரபிக்,
முன்னாள் நகர தலைவர் வைரவன், வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்சி என்கிற அப்சல் உசேன்,ஐ. என். டி .யு.சி துணைத் தலைவர் தங்கமணி,பொருளாளர் தாயுமானவன்,
நகர துணைத்தலைவர் வெங்கட்,நகர செயலாளர் செல்வகுமார்,மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, மகிளா காங்கிரஸ் ரத்னமாலா,சோட்டா பாய் மற்றும் வேதாரணியம் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும் காங்கிரஸ் தொண்டர்களும் வேதாரண்யம் உப்பு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.போலிஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

