தூத்துக்குடி, அக்,1
தூத்துக்குடியில் 80 வயது கடந்த மூத்த வாக்காளர்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், பொன்னாடை அணிவித்து கௌரவித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதத்தினை வழங்கினார்.
அக்டோபர் 1 ம் நாள் உலக முதியோர் தினமாக கொண்டாடப்படும் இந்நன்நாளில் இந்திய தேர்தல் ஆணையத்தால் இந்திய ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் மூத்த குடிமக்கள்/வாக்காளர்களின் பங்களிப்பை அங்கீகரித்திடும் விதமாக 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் 100 வயது கடந்த வாக்காளர்கள் ஆகியோரை கௌரவித்தும் அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரால் வழங்கப்பட்டுள்ள பாராட்டு கடிதத்தினை வழங்கிட தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், நேற்று மாவட்ட ஆட்சியரகத்தில் 80 வயது கடந்த மூத்த குடிமக்கள்/வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்து அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதத்தினை வழங்கினார். மேலும் மாவட்டத்திலுள்ள இதர 80 வயது மற்றும் 100 வயது கடந்த மூத்த குடிமக்கள்/வாக்காளர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு சென்று சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள்/தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கௌரவித்து அவர்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையரின் பாராட்டுக்
கடிதத்தினை வழங்கிடவுள்ளனர்

