தூத்துக்குடி,
அக்,1
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளியில் மாணவ- மாணவியருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவி கலைச்செல்வி திலகராஜ் கலந்து கொண்டு, மாணவ- மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டியை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
விழாவில் முன்னாள் மாநகராட்சி உறுப்பினர் கதிரேசன், திலகராஜ், மாவட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) செல்வராணி, பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி, மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

