வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேல காட்டைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடித்ததற்காக கைது
வேதாரணியம் செப்டம்பர் 30
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த செட்டிபுலம் மேலகாட்டில்
வசித்து வரும்
செந்தில்குமார்
என்பவர் அவரது தோட்டத்தில் குயில் பறவைகளை கண்ணி வைத்து பிடிப்பதாக வந்த ரகசிய தகவலையடுத்து திருச்சி மண்டல தலைமை வனப் பாதுகாவலர் சதீஷ், நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா ஆகியோரின் உத்தரவின்படி
வேதாரணியம் வனசரக அலுவலர் பா.அயூப்கான் தலைமையில்
வனவர் ராமதாஸ், செல்வி மகாலட்சுமி, வனக்காப்பாளர் ரணீஷ்குமார் ,
வேட்டை தடுப்பு காவலர் பாண்டியன் ஆகியோர்கள்
செட்டிபுலம் மேலக்காட்டை சேர்ந்த செந்தில்குமார் என்பவரது வீட்டிற்கு அருகிலுள்ள
அவரது தோட்டத்தில் உள்ள இலுப்பை,புளிய மரம் போன்ற மரங்களில் குயில் பறவைகளைப் பிடிக்க 6 குயில் பிடிக்கும் தட்டுகளில் கண்ணி வைத்து பழங்களை கட்டி குயில் பறவைகளைப் பிடிக்க வாயினால் குயில்போல கூவி குயில் பிடிக்க முயற்சிக்கும் போது அவரை பிடித்து விசாரணை செய்து பிடி பொருள்கள் மற்றும் செந்தில் குமாரை வன உயிரின குற்றப் படி கைது செய்து வழக்குப்பதிவு செய்து நாகப்பட்டினம் வன உயிரின காப்பாளர் யோகேஷ் குமார் மீனா உத்தரவின்படி
அபராதமாக ரூபாய் 25,000/-
விதிக்கப்பட்டது.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

