வேதாரண்யத்தில் சத்தியசாயி மந்திரில் புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றி
சாதனா சொற்பொழிவு
வேதாரணியம் செப்டம்பர் 25
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் சத்திய சாயி மந்திரல்(சாய்பாபா கோயில்) புட்டபர்த்தி சாய் சேவைகள் மற்றும் பாபாவின் கருணை பற்றிய சாதனா
சொற்பொழிவு தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவன தலைவர் எஸ். ஆர் .சந்திரசேகரர் தலைமையில் நடைபெற்றது .தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவன ஆன்மீக கன்வீனர் ராஜகோபால், தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவன கல்வி ஒருங்கிணைப்பாளர் திருமதி. உத்தர் ரகுநாதன் ,நாகப்பட்டினம் மாவட்ட ஸ்ரீ சத்ய சாயி சேவா நிறுவன மாவட்ட தலைவர் டி.என். சேகர் ஆகியோர்களின் சாய்பாபா கருணை பற்றிய சொற்பொழிவு நடைபெற்றது.இறுதியில் தீப ஆராதனை காண்பிக்கப்பட்டு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.




வேதாரண்யத்தில் இருந்து வரும் ஸ்ரீ சத்திய சாய் மந்திர் பல ஆண்டு காலமாக வேதாரண்யத்தில் வசித்துவரும் சந்திரமௌலி மோகனா தம்பதிகளால்
நிர்வாகிக்க பட்டு வருகிறது.இந்த ஸ்ரீ சத்ய சாய் மந்திர் தினமும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு வழிபாடாக ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை அன்று சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமையும் ஏராளமான சாய்பாபா பக்தர்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வார்கள் .
மேலும் ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக் கிழமைகளிலும்
வேதாரணியம் சத்ய சாயி மந்திரில் இலவச பொது மருத்துவ ஆலோசனை முகாம் டாக்டர் ஆர். அபிராமி மற்றும் சாய் மருத்துவ குழுவினரால்
நடத்தப்பட்டு வருகிறது. போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய்
மச்சோடா.

