• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்த எஸ்.பி எஸ்.ஜெயக்குமார்‌

policeseithitv by policeseithitv
February 24, 2021
in 24/7 ‎செய்திகள், குற்றம், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாத்தான்குளம் பகுதியில் ஒருவர் கொலை – குற்றவாளியை கைது செய்ய தனிப்படை அமைத்த எஸ்.பி  எஸ்.ஜெயக்குமார்‌
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒருவர் கொலை – சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌நேரில் சென்று பார்வையிட்டு எதிரியை விரைந்து கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைக்குளம் காட்டுபகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த தங்கதுரை மகன் யோவான் அற்புதராஜ் (36) என்பவர் இன்று காலை கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது குறித்து தகவலறிந்த சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு சாத்தான்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஸ்குமார்; மேற்பார்வையில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் பெர்னாட் சேவியர் தலைமையிலான கால்துறையினர், தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் சாம்சன் ஜெபதாஸ் தலைமையிலான காவல்துறையினர் மற்றும் தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் கந்தசாமி தலைமையிலான காவல்துறையினர் அடங்கிய ஆகிய 3 தனிப்படையினர் அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

மேற்படி உத்தரவின் பேரில் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டதில் கொலை செய்யப்பட்ட யோவான் அற்புதராஜ் என்பவர் கீழ பனைகுளம் மேலத்தெருவைச் சேர்ந்த செல்லத்துரை (60) என்பவரின் மருமகளை அடிக்கடி தொந்தரவு செய்து, கடந்த ஆண்டு நவம்பர் 12ம்தேதி அன்று அந்த பெண்ணை அரிவாளால் தாக்கி கொலை முயற்ச்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சாத்தான்குளம் காவல்நிலைய போலீசார் கைது செய்து சிறையிலடைத்தனர். இந்நிலையில் பிணையில் வந்த யோவான் அற்புதராஜ் மீண்டும் செல்லத்துரையின் மருமகளை தொந்தரவு செய்துள்ளார். இந்நிலையில் இதன் காரணமாக இன்று காலை செல்லத்துரை சாத்தான்குளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கீழ பனைகுளம் காட்டுபகுதியில் யோவான் அற்புதராஜை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

மேற்படி வழக்கின் எதிரி செல்லத்துரை என்பவரை விரைந்து கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார்‌ தனிப்படையினருக்கு உத்தரவிட்டார்.

Previous Post

நெல்லை காவலர்களுக்கு உடலில் அணியும் கேமராக்கள் – துணை கமிஷ்னர் வழங்கினர்

Next Post

செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் – தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் – எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

Next Post
செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் – தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் – எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

செய்துங்கநல்லூர் பஜாரில் ஆக்கிரமிப்பாளர்கள் அட்டூழியம் - தட்டிக் கேட்ட சப் இன்ஸ்பெக்டருக்கு டார்ச்சர் - எஸ்.பி. நடவடிக்கை பாயுமா?

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In