வேதாரணியம், கோடியக்கரையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கடலில் புனித நீராடினர்
வேதாரணியம் செப்டம்பர் 25
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை
கடலில் மகாளய அமாவாசையையயொட்டி முன்னோர்கள் நினைவாக பிதுர் தர்ப்பணம் செய்து ஏராளமான இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக பிதுர் தர்ப்பணம் கொடுத்து பக்தர்கள் கடலில் புனித நீராடினர். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மகாளய அமாவாசை ஆகும்.அதன்படி இந்த வருடம் புரட்டாசி எட்டாம் தேதி 25.09.2022
ஞாயிறு அதிகாலை 4.05 முதல் மறுநாள்
திங்கட்கிழமை
அதிகாலை 4.21
வரை இந்த மகாளய அமாவாசை இருக்கும். தை அமாவாசை ஆடி அமாவாசை ஆகியவற்றை விட திதி கொடுப்பதற்குமிகவும் சிறந்தது இந்த மகாளய அமாவாசை ஆகும் .இந்த நாளில் புனித நீர் நிலைகளுக்கு சென்று நம் முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக தர்ப்பணம் கொடுப்பது மிகவும் நல்லது.


வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து முன்னோர்களுக்கு படைத்து பின் காகத்திற்கு உணவு வைத்து வழிபடலாம். இவ்வாறு செய்வதன் மூலம் நம் முன்னோர்களின் ஆசி நமக்கும் நமது சந்ததியினருக்கும் கிடைக்கும்.
மேலும் பக்தர்கள் இறந்து போன தங்கள் முன்னோர்கள் நினைவாக பிதுர் தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடிய பின்
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். இந்த மகாளய அமாவாசையையொட்டி கோடியக்கரை ஆதி சேது கடற் கரையிலும் வேதாரணியம் சன்னதி கடற்கரையிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பிதுர் தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடினர்.


போலீஸ் தேதி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

