வேதாரண்யத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் 67 வது பிறந்தநாள் விழா
வேதாரண்யம் செப்டம்பர் 23
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வேதாரணியம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான பி.வி. ராஜேந்திரன் 67 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னதாக காலையில் ஆயக்காரன்புலம் கடைத்தெருவில்வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ் தலைமையில் காங்கிரஸ் கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டு
பள்ளி மாணவி ஒருவருக்கும் முதியவர் ஒருவருக்கும் 2 சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
பின்னர் தகட்டூர் கடைத்தெருவில்
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வே. கணேசன் முன்னிலையில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன .
பின்னர் வேதாரண்யத்தில் வடக்கு வீதி உப்பு சத்யாகிரக கட்டிட வளாகத்தில் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டு கேக் வெட்டி இனிப்புகள் வழங்கப்பட்டன.
பின்னர் வேதாரணியம் இந்திய தேசிய காங்கிரஸ் நகரம், ஐஎன்டியுசி, வட்டாரம், ராஜீவ்காந்தி பஞ்சாயத்து ராஜ் கமிட்டி ,மகிளா காங்கிரஸ், வர்த்தக காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், இலக்கிய அணி, ஊடகப்பிரிவு ,ஓபிசி பிரிவு ,,மற்றும் வேதாரண்யம் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் நடைபெற்றது .இந்த ரத்ததான முகாமில் 36 பேர் ரத்ததானம் கொடுத்தார்கள்.36 யூனிட் ரத்ததானம்
பெறப்பட்டது.



பின்னர் மாலையில் நடந்த நிகழ்வில்
வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளி அகஸ்தியர் திருக்கோயிலில் அபிஷேக ஆராதனைகளும் அதனைத் தொடர்ந்து அகத்தியர் சன்மார்க்க குடிலில் வழிபாடும் அன்னதானமும் நடைபெற்றது.
இன்று நடைபெற்ற அனைத்து நிகழ்விலும்
இந்திய தேசிய காங்கிரஸ் வேதாரணியம் வட்டார தலைவர் சங்கமன் கோவிந்தராஜ்,
நகரத் தலைவர் அர்ஜுனன், துணைத்தலைவர் மையா
ரபிக், முன்னாள் நகர தலைவர் வைரவன், மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் ஆரோ பால்ராஜ்,
மாவட்ட இலக்கிய அணி தலைவர் புலவர் கணேசன், வர்த்தக அணி மாவட்ட பொதுச்செயலாளர் அப்சி என்கிற அப்சல் உசேன் ,நகரத் துணைத் தலைவர் வெங்கட், நகர செயலாளர் செல்வகுமார், ஐஎன்டியூசி துணைத்தலைவர் தங்கமணி, பொருளாளர் தாயுமானவன்,
இளைஞரணி சட்டமன்றத் தலைவர் ஆப்கான், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி சத்யகலா ,மகளிர் அணி மாவட்ட பொதுச்செயலாளர் செல்வராணி, ஊடகப் பிரிவை சேர்ந்த விக்னேஷ், வட்டார துணைத்தலைவர் சக்கரபாணி, ராஜாஜி ஓபிசி செந்தில் வேதாரணியம் காங்கிரஸ் ஒன்றிய பொதுச் செயலாளர் ராகுல் மற்றும் காங்கிரஸ் பேரியக்க நிர்வாகிகளும், காங்கிரஸ் தொண்டர்களும்
வேதாரண்யம் உப்பு தொழிலாளர்கள் பி அண்ட் பிளாக்உப்பு தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்கள்
திரளாக கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர்
எல்விஸ் லாய் மச்சோடா.

