தூத்துக்குடி,
செப்,23
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு ராஜீவ் காந்தி நகர் ஆகிய பகுதி உள்ளனர் இங்கு உள்ள பொதுமக்கள் மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவரும் கூட்டுறவு கடன்சங்க தலைவரும் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளருமான சரவணக்குமாரிடம் அளித்த கோரிக்கை மனுவில்
தாங்கள் குடியிருக்கும் பகுதி தேசிய நெடுஞ்சாலையில் இருப்பதால் பள்ளி செல்லும் குழந்தைகள் பணிக்கு செல்லும் பெண்கள் உட்பட பணிகளுக்காக வெளியில் சொல்லும் அச்சத்திலேயே சாலையை கடக்க முடிகிறது. தூத்துக்குடி டூ ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையாக இருப்பதால் இந்தப் பகுதியில் கனரக வாகனம் உட்பட பல்வேறு வாகனம் செல்வதால் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருந்து வருகிறது. அதுபோல் பொதுமக்கள் மாணவர்கள் பலரும் சாலையை கடந்து செல்வதற்கும் முடியாத சூழ்நிலை உருவாகிறது
பல சமயங்களில் இந்த பகுதியில் ரோடுகளை கடக்க முயலும்போது விபத்து ஏற்படுகிறது. ஆகவே தாங்கள் இந்தப் பகுதியில் வேகத்தடை அமைத்து தரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். இது நெடுஞ்சாலைத்துறைக்கு சம்பந்தப்பட்ட ரோடு என்பதால் பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிடம் வேகத்தடை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பொதுமக்களின் கோரிக்கையை பெற்று மாப்பிள்ளையூரணி ஊராட்;சி நிர்வாகம் சார்பில் தலைவர் சரவணக்குமார் எம்எல்ஏ விடம் கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாப்பிள்ளையூரணி பகுதியில் சாலை போடும் பணி நடைபெற்று வந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் குடியிருப்பு பகுதிகளில் குறிப்பாக தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கூறியதையடுத்து 2 இடங்களில் வேகத் தடுப்பு அமைக்கும் பணி நடைபெற்றது. இந்தப் பணியை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் நேரில் நின்று ஆய்வு மேற்கொண்டு தரமான முறையில் அமைக்க வேண்டும் என்று பணியாளர்களிடம் கேட்டுக் கொண்டு பார்வையிட்டார்.
ஆய்வின் போது ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, மகேஸ்வரி காமராஜ், மற்றும் கௌதம் உள்பட பலர் உடனிருந்தனர். அப்பகுதி பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றி கொடுத்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா விற்கும் இதற்கு முழு முயற்சியாக பணிகளை மேற்கொண்ட மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவண குமாருக்கு அப்பகுதி பொதுமக்கள் , வணிகர்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் மனதார பாராட்டினார்கள்.
செய்தி தொகுப்பு:
எம். ஆத்தி முத்து.

