நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 21 நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மாற்றுதிறனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று வழங்கினார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதலைமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் 85406 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 162 கோடி 596 இலட்சம் மதிப்பிட்டில் 137628 குடும்பங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் மாற்றுதிறனாளிகள் வசிக்கும் நிர்மலா அன்பு இல்லத்தில் 30 நபர்களுக்கு மருத்துவகாப்பீட்டு திட்ட அடையாள அட்டையினை அவர்கள் வசிக்கும் இல்லத்திற்கு நேரடியாக சென்று வழங்கி மேலும் அனைவருக்கும் மருத்துவகாப்பீட்டு திட்ட அடையாள அட்டைபெற தேவையான நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் சுகாதார பணிகள் ஜோஸ்பின்அமுதா முதலமைச்சர் விரிவான காப்பீட்டு மாவட்ட திட்ட அலுவலர் கே.கணேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

