நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள் மற்றும் அரசு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 21 நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2021-22ஆம் கல்வியாண்டில் டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றவர்கள் மற்றும் அரசு பொது தேர்வில் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற அரசு பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
ஆசிரியர் பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கான விருது வழங்கப்படுகிறது. ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி இராதாகிருஷ்ணனை போற்றும் விதமாக ஆண்டுதோறும் இவ்விருது வழங்கப்படுகிறது. கல்வித்துறையில் சிறந்து பணியாற்றிய ஆசிரிய ஆசிரியைகளுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது. இந்தியாவின் எதிர்க்காலத்தை நீர்ணையிக்க கூடிய இளைய தலைமுறையினரை நற்பண்புகளோடு உருவாக்குவது ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. இன்றைய தினம் 21 – 22 ஆம் கல்வியாண்டில் நாகப்பட்டினத்தில் உள்ள அனைத்து அரசு, நகராட்சி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரிய ஆசிரியைகள் 7 நபர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருது மாண்புமிகு தமிழ்நாடு பள்ளி கல்வி துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. நல்லாசிரியர் விருது பெற்றவர்களை மனதார பாராட்டி மகிழ்கிறேன். அதேபோல் நாகப்பட்டினம் மாவட்டத்தில் 21-22ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் 100 சதவீதம் தேர்ச்சி வழங்கிய 31 பள்ளிகளை சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளிலும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிட மாணவ மாணவிகளை ஊக்கப்படுத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.




நல்லாசிரியர் விருது பெற்ற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 7 ஆசிரியர் பெருமக்களுக்கும், அரசு பள்ளிகளில் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுதந்த 31 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசினை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அலுவலர் திருநாவுக்கரசு குருக்கத்தி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் காமராஜ் மற்றும் ஆசிரிய ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

