வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா
வேதாரணியம் செப்டம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மையியல் துறை நடத்தும் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா கல்லூரி கலை அரங்கத்தில் நடைபெற்றது. மேலாண்மையியல் இரண்டாம் ஆண்டு மாணவி நளினி வரவேற்புரை ஆற்றினார்.
வேதாரணியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் பி முருகன் தலைமை உரையாற்றினார்.கல்லூரி மேலாண்மையியல்துறைத் தலைவர் ப.பிரபாகரன் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக சமூக ஆர்வலர் மற்றும் தொழிலதிபர் ஆர் சுந்தரபாண்டியன் கலந்து கொண்டார்.
பி கார்த்திகேயன், டி. இளையராஜா,ஏ மாரிமுத்து, எம் விஜயலட்சுமி,எஸ். கார்த்திகா,டி. ராஜா வாழ்த்துரை வழங்கினார்கள்.மேலாண்மையியல் முதலாம் ஆண்டு மாணவி ஜி.நித்யஸ்ரீ ஏற்புரை ஆற்றினார்.

மேலாண்மையியல் மூன்றாம் ஆண்டு மாணவி எஸ். கார்த்திகா நன்றி உரையாற்றினார்.இறுதியில் சிறப்பு விருந்தினர் ஆர் சுந்தர பாண்டியன் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகளை அளித்தார்.இந்த விழாவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

