வேதாரணியம் செப்டம்பர் 21
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரையில் தேசிய கலங்கரை விளக்க தினம் கொடியேற்றி கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் 28 கலங்கரை விளக்கங்கள் உட்பட இந்தியாவில் 183 கலங்கரை விளக்கங்கள் செயல்படுகின்றன. நாகை மாவட்டத்தில் நாகப்பட்டினத்தில் ஒன்றும் கோடிக்கரையில் ஒன்றும் செயல்பட்டு வருகிறது.கோடியக்கரையில் செயல்பட்டுவரும் கலங்கரை விளக்கம் ஆங்கிலேயர் காலத்தில் 1890 ஆம் ஆண்டு கட்டப்பட்ட கலங்கரை விளக்கம், 1998 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட கலங்கரை விளக்கம் என இரண்டு கலங்கரை விளக்கங்களும் இயங்கி வருகிறது .மத்திய அரசின் தரைவழி போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும் கலங்கரை விளக்கங்கள் 1927 ஆம் ஆண்டு செப்டம்பர் 21 ஆம் நாள் கலங்கரை விளக்க செயல்பாடுகளின் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 21ம் நாள் கலங்கரை விளக்கதினம் கொண்டாடப்படுகிறது. கோடிக்கரை கலங்கரை விளக்க வளாகத்தில் தேசியக்கொடியை ஏற்றி பின் கலங்கரை விளக்கக் கொடியை கலங்கரை விளக்க பொறுப்பு தலைமை அதிகாரி பழனிச்சாமி ஏற்றி வைத்து கொடிக்கு மரியாதை செலுத்தப்பட்டது . பின் இனிப்புகள் வழங்கப்பட்டது.



கலங்கரை விளக்க தினத்தை முன்னிட்டு இன்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை பார்வையாளர்கள் கட்டணமின்றி கலங்கரை விளக்கத்தில் ஏறி பார்வையிடலாம்.
கலங்கரை விளக்க கொடியேற்று விழாவிற்கு உதவி பொறுப்பு கலங்கரை விளக்க அதிகாரி ரோகித் கலங்கரை விளக்க ஊழியர்கள் சக்தி, மகேஷ், நாகரத்தினம், சரவணன், முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

