வேதாரண்யத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்தநாள் பொதுக்கூட்டம்
வேதாரண்யம் செப்டம்பர் 20
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பேரறிஞர் அண்ணா 114 வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் ராஜாஜி பூங்கா அண்ணா அரங்கத்தில் நடைபெற்றது. பொதுக் கூட்டத்திற்கு வேதாரணியம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர் கிரிதரன் தலைமை ஏற்க வேதாரணியம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் டி.வி. சுப்பையன் வரவேற்புரை ஆற்றவும்
அவை.ஆர். பாலசுப்பிரமணியன், தங்க. சவுரிராஜன்
டி பிச்சையன், கமலா அன்பழகன்
செந்தமிழ்ச்செல்வி பிச்சையன்
ஆகியோர் முன்னிலை வகிக்கவும்
கே. முருகு மணி (அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர்
கரூர் ஏ. சுந்தரம் (தலைமை கழக பேச்சாளர் )
மற்றும் ஓ எஸ் மணியன் வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் (கழக அமைப்புச் செயலாளர்,நாகை மாவட்ட கழக செயலாளர், முன்னாள் தமிழக கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர்)
சிறப்புரை ஆற்றவும்
மற்றும் ஒன்றிய நகர பேரூர் சார்பு அணி செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி பொறுப்பாளர்கள் ,ஒன்றிய கழக உறுப்பினர்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் ,கூட்டுறவு வங்கித் தலைவர்கள், ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள், அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் ,வேதாரணியம் கிழக்கு மேற்கு ஒன்றிய சார்பு அணி நிர்வாகிகள், வேதாரணியம் நகர கழக சார்பு அணி மற்றும் வார்டு கழக நிர்வாகிகள், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


வேதாரணியம் சட்டமன்ற உறுப்பினர் ஓ.எஸ் மணியன் பேசும்போது சொத்து வரி ஏற்றம், மின்சார கட்டண உயர்வு , மகளிர்க்கான உரிமைத் தொகை 1,000 வழங்கவில்லை எனவும் சிலிண்டர் விலை உயர்ந்து
உள்ளதாகவும், அன்றாடம் பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து விட்டதாகவும் தமிழக அரசை கண்டித்து உரையாற்றினார்.இறுதியாக வேதாரணியம் நகரக் கழகச் செயலாளர் எம். நமச்சிவாயம் நன்றி உரையாற்றினார் போலீஸ் செய்தி டிவிக்காக நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

