தூத்துக்குடியில் ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
தூத்துக்குடி ஏஐடியுசி கட்டுக்கூலி மூடை சுமை தொழிலாளர் முன்னேற்ற சங்க 32வது ஆண்டு விழா எம்பரர் தெருவில் உள்ள அலுவலகத்தில் தலைவர் ஞானசேகர் தலைமையில் பொருளாளர் முருகேசன் செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வக்கீல் கனபதி சுப்பிரமணியன், சிபிஐ மாவட்ட செயலாளர் கரும்பன், ஏஐடியுசி தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலாளர் கிருஷ்ணராஜ், பாலசிங்கம், கிருஷ்ணமூர்த்தி, பாண்டி, மாடசாமி, சுப்பிரமணியன், உள்ளிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
மத்திய அரசு கொண்டு வந்த திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டங்களை தமிழக சட்டசபையில் அமுல்படுத்த கூடாது என்று தமிழக அரசை கேட்டுக்கொள்வது, சுமைஏற்றி இறக்கும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். என தமிழக அரசை கேட்டுக்கொள்வது. தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு பண பலன்களை காலம் தாழ்த்தாமல் வழங்க வேண்டும். சுமை ஏற்றி இறக்கும் தொழிலாளர்கள் பணியின் போது காயங்கள் ஏற்பட்டால் 50 ஆயிரம் இழப்பிடாகவும், மரணம் ஏற்பட்டால் 2லட்சமும், தமிழக அரசு வழங்க வேண்டும். உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் தொழிலாளர் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சங்க உபதலைவர் ஜீவா நன்றியுரையாற்றினார்.

