வேதாரணியம் செப்டம்பர் 18
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாகுடி யில் நேற்று இரவு ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த தேத்தாகுடி வடக்கு பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகன்
ஜெயகோபால் (வயது 55) என்பவர் மீது அந்த பகுதியில் அடையாளம் தெரியாத வேகமாக வந்த கார் மோதி நிற்காமல் சென்று விட்டது. ஜெயகோபால் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
ஆனால் சம்பவ இடத்தில் இருந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி வராத காரணத்தால் கிராம மக்கள் இரண்டு மணி நேரமாக சாலை மறியல் செய்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வேதாரணியம் காவல்துறையினர் சாலை மறியல் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் கிராம மக்கள் சாலை மறியலை கைவிடவில்லை. தொடர்ந்து அமரர் ஊர்தி வராததால் கிராம மக்களே
இறுதி சடங்கு ஊர்வலத்திற்கு எடுத்து செல்லும் தனியார் அமரர் ஊர்தியில்
வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக உடலை எடுத்துச் சென்றனர்.இந்த சாலை மறியலால் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து வேதாரணியம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
போலீஸ் செய்தி டிவிக்காக
நாகை மாவட்ட செய்தியாளர் எல்விஸ் லாய் மச்சோடா.

