நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டுதூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 17 நாகப்பட்டினம் மாவட்;டம் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை சார்பில் சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தினை முன்னிட்டு தூய்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று தொடங்கி வைத்தார்.
கடல்களையும் கடற்கரையினையும் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் ஆண்டு தோறும் செம்படம்பர் மாதம் 3 வது சனிக்கிழமை சர்வதேச கடற்கரை தூய்மை தினமாக கொண்டாடப்படுவதனை தொடர்ந்து, நாகப்பட்டினம் புதிய கடற்கரை மற்றும் வேளாங்கண்ணி கடற்கரையில் வனத்துறை, காவல்துறை, தொண்டு நிறுவனங்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு கடற்கரை பகுதிகளில் உள்ள காகிதங்கள் நெகிழிகள் போன்றவைகளை அகற்றி தூய்மை படுத்தும் பணிகளை மேற்கொண்டனர்.

கடலோர பகுதிகளில் வாழும் மக்களின் வாழ்வாதாரமாக இருப்பது மீன் பிடி தொழில் ஆகும். இவ்வாறு சிறப்பு மிக்க மீனவர்களுக்கு வாழ்வாதாரத்தை தரும் கடலும் கடற்கரையும் பிளாஸ்டிக் கழிவுகளையும் மற்றும் இதர கழிவுகளையும் கொண்டும் குப்பை கிடங்காக மாறி வருவதை தடுக்கும் வகையில் தூய்மை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இவ்வாறு கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கம் பொதுமக்கள் அனைவரும் கடல் மற்றும் கடற்கரையினை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதே ஆகும்.
மீன்வளத்தின் மூலம் வருமானத்தை ஈட்டித்தரும் ஆதாரமாக கடல் உள்ளது கணக்கிட முடியாத இயற்கை வளங்களை கொண்டு மனிதர்களின் வாழ்வாதாரமாக விளங்குகின்ற கடல் மற்றும் கடற்கரை பகுதிகளை தூய்மையாக வைத்திருக்க இந்த நாளில் உறுதியேற்போம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வன உயிரினக்காப்பாளர் யோகேஷ்குமார் மீனா நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவி கடலோர பாதுகாப்புகுழும ஆய்வாளர் ப.ராஜா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர்.

