திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சிவனாண்டி மற்றும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பாபுல்அலி என்பவர்கள் உத்தமபாளையத்தில் உள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த நிலையில் அறையின் கதவைத் தட்டி இரண்டு நபர்கள் தங்கியிருந்த இருவரையும் தாக்கி ஏழாயிரம் ரூபாய் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்றுவிட்டனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட இருவரும் உத்தமபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ்,இ.கா.ப.,உத்தரவின் பேரில் உத்தமபாளையம் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா,இ.கா.ப அறிவுறுத்தல் படியும், காவல் ஆய்வாளர் K.சிலைமணி மற்றும் சார்பு ஆய்வாளர் .D.திவான் மைதீன் தலைமையிலான காவல்துறையினர் சைபர் கிரைம் பிரிவு உதவியுடன் விரைந்து செயல்பட்டு குற்றத்தில் ஈடுபட்ட உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராஜவசந்த் மற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த சங்கர் ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்தனர்..


