வேதாரணியம் செப்டம்பர் 15
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு காவல் சரகம் தலைஞாயிறு அழகு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவாசகம் வயது 65
நேற்று இரவு 8 மணி அளவில் அழகு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மண்டகப்படி உபயம் செய்வதற்காக மேற்படி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தபோது மணி வாசகத்தின் மகள் தமிழ் மாலா என்பவரை திருமணம் செய்த அவரது மருமகன்
சுசீந்தரன் வயது 36
தனது வீட்டின் எதிரில் தனது மனைவியுடன் குடும்ப பிரச்சினை காரணமாக சண்டையிட்டுக் கொண்டு இருந்தவர்
திடீரென்று நடந்து சென்று கொண்டிருந்த மணி வாசகத்தை கம்பியால் தலையில் கடுமையாக தாக்கியதில் காயம் பட்ட மணிவாசகம் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்த போது அங்கு பணியில் இருந்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இறந்த மணி வாசகத்தின் பிரேதம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைஞாயிறு காவல்துறையினர் விசாரணை நடத்தி குற்றவாளியை கைது செய்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

