• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
September 14, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
மாப்பிள்ளையூரணி வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திருமாவளவன் எம்.பி திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாநகரின் முக்கிய பகுதியில் டாக்டர் அம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலை சுமார் 30 லட்சம் மதிப்பீட்டில் இன்று திறக்கப்பட்டது . இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்த எம்பி திருமாவளவன் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட வடக்கு சோட்டையன் தோப்பில் அம்பேத்கர் படிப்பகம் திறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்கு சண்முகக்கனி, கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர். கோபால், பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு சோட்டையன் தோப்பு விடுதலை சிறுத்தை கட்சி முகாம் செயலாளர் ரஞ்சித்குமார், வழக்கறிஞர் பிரிவு அர்ஜுன் ஆகியோர் வரவேற்புரையாற்றினார்கள்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிறுவனத் தலைவரும் எம்.பியுமான தொல் திருமாவளவன் படிப்பகத்தை திறந்து வைத்து வருகை பதிப்வேட்டில் கையெழுத்திட்டு புத்தர் சிலையை திறந்து வைத்தார்.
திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த எம்பி திருமாவளவனை மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார் பொன்னாடை போர்த்தி வரவேற்றார்.
திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற திருமாவளவன்
பேசுகையில் இந்த பகுதியில் இப்படி ஓரு படிப்பகம் அமைவதற்கு காரணமாக இருந்த நிர்வாகிகளை முதலில் பாராட்டுகிறேன். ஓவ்வொரு ஊரிலும் இது போன்ற படிப்பகம் உருவாக்கப்பட வேண்டும் என்று எனது 60வது பிறந்தநாள் விழாவில் செயல்திட்டம் உருவாக்கப்பட்டது. அதை நிறைவேற்றும் வகையில் தமிழகத்தில் முதன் முதலில் வடக்கு சோட்டையன் தோப்பில் தான் அதை முதன்முதலில் நிறைவேற்றி கொடுத்துள்ளார்கள்.
இதற்கு உருவாக்கம் கொடுத்த தலைவர் ரவி, செயலாளர் வக்கீல் சார்லஸ், பொருளாளர் செல்வகுமார், துணைத்தலைவர் தங்கம், மற்றும் பல்வேறு உதவிகளை செய்து கொடுத்த மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணக்குமார், உள்ளிட்டவர்களை இந்த நல்ல தினத்தில் மனதார பாராட்டுகிறேன். என்று பேசினார். பின்னர் அவர் பேசுகையில் கல்வி உள்பட அனைத்திலும் நாம் முன்னேற வேண்டும். இதற்கு முன்னோட்டமாக அம்பேத்கர் கல்வி இலக்கியம் அறிவியல் அரசியல் என அனைத்திலும் சாதனை படைத்தார். அவரது படிப்புக்கு மராட்டிய மாநிலத்தில் உள்ள பலர் உதவி செய்ததால் அமெரிக்கா லண்டன், சென்று பட்டப்படிப்பை மேற்கொண்டு டாக்டர் பட்டம் பெற்றார்.
ஓடுக்கப்பட்ட மக்களின் பாதுகாவலராக விளங்கியவரின் வழியில் நாம் பயணித்து வருகிறோம். வருங்கால நமது சந்ததியினர் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும் அதற்கு ஊர் தோறும் இது போன்ற படிப்பகம் அமைக்க வேண்டும் என்று பேசினார். பின்னர் ஓரு குடும்ப தலைவின் பெண் குழந்தைக்கு அறிவுமதி என்று பெயர் சூட்டினார்.


முன்னதாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவரும் கூட்டுறவு கடன் சங்க தலைவரும் திமுக கிழக்கு பகுதி ஓன்றிய செயலாளருமான சரவணக்குமார் தலைமையில் தெற்கு மாவட்ட வர்த்தக அணி துணைசெயலாளர் கணேசன், ஒன்றிய துணைச்செயலாளரும் ஊராட்சி மன்ற உறுப்பினருமான வசந்தகுமாரி, ஒன்றிய கவுன்சிலர் ஆனந்தி, ஒன்றியகவுன்சிலர் தொம்மைசேவியர், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார், மாவட்ட பிரதிநிதி சிவக்குமார், திமுக நிர்வாகிகள் மாரியப்பன், பால ஆனந்த், கௌதம், மைக்கேல் ராஜ், ஆகியோர் ரோஜாப்பூ மாலை அணிவித்து வரவேற்றனர்.
விழாவில் விடுதலை சிறுத்தை கட்சி தென்மண்டல செயலாளர் தமிழினியன், மத்திய மாவட்ட செயலாளர் அகம்மது இக்பால், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சங்கரன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை வடக்கு சோட்டையன் தோப்பு ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். நூலகம் திறப்பு விழாவை முன்னிட்டு மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவர் சரவணகுமார் கேக் வெட்டி அப்பகுதி மக்களுக்கு வழங்கி இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

செய்தி தொகுப்பு எம். ஆத்தி முத்து.

Previous Post

நாகப்பட்டினம் மாவட்டம் பிரதாபராமபுரம் ஊராட்சியில் மக்கள் நேர்காணல் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தலைமையில் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் மற்றும் கீழ்வேளுர் MLA வி.பி.நாகை மாலி முன்னிலையில் நடைபெற்றது.

Next Post

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 

Next Post
வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 

வேதாரணியத்தில் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் அறக்கட்டளை இணை நிறுவனர் பத்மஸ்ரீ வே. அப்பாக்குட்டி அவர்களின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா 

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In