தூத்துக்குடி செப்.10,
தூத்துக்குடி மாநகராட்சி பிரதான சாலைகளின்; இருபுறங்களிலும் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி துவக்கி வைக்கிறார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக ஜெகன் பெரியசாமி பொறுப்பேற்ற நாளில் இருந்து மாநகர வளர்ச்சிப் பணிகள் மற்றும் கட்டமைப்பு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து பணியை விரைப்படுத்தி வருகிறார். குறிப்பாக பருவ மழையை முன்னிட்டு வடிகால் அமைக்கும் பணியில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகளை விரைந்து முடித்திட அறிவுரை வழங்கி பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.
மேலும், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப்பணிகளை மாதம் இருமுறை ‘மாஸ் கிளினிங்’ செய்யப்பட்டு வருகிறர். பேருந்து நிறுத்துமிடங்களில் தேவையற்ற வால்போஸ்டர் மற்றும் முட்புதர்களை அகற்றுவது. சாலை ஓரங்களில் உள்ள குப்பைகளை முழுமையாக அகற்றுவது போன்ற பணிகளை மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ தலைமையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் நலன் கருதியும், இருசக்கர வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதியும் சாலைகளின் இருபுறமும் உள்ள மணல் திட்டுக்களை முழுமையாக அகற்ற மேயர் ஜெகன் பெரியசாமி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக, தூத்துக்குடி பிரதான சாலையான 3வது மைல் மேம்பாலத்தில் துவங்கி தமிழ்சாலை, வ.உ.சி.சாலை வழியாக சப்கலெக்டர் அலுவலகம் வரை சாலையின் இருபுறங்களிலும் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றும் பணி இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை வரை நடைபெற உள்ளது. இதில் 70க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் 8 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
இன்று (10.09.2022) இரவு 9 மணியளவில் 3வது மைல் மேம்பாலத்தில் இருந்து தூய்மைப்பணிகளை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் சாருஸ்ரீ ஆகியோர் துவக்கி வைக்கின்றனர்.
சுமார் 6 கி.மீ தூரம் வரை நடைபெறும் இந்த தூய்மைப் பணிகள் அதிகாலை வரை நீடிக்கும் எனவும் கூறப்படுகிறது.
தூத்துக்குடி பிரதான சாலையில் மணல் திட்டுக்கள் அகற்றப்படுவதால் பல்வேறு விபத்துக்கள் தவிர்க்கப்படும் என்பதால், வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் ஆணையர் சாருஸ்ரீ-க்கும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
செய்தி தொகுப்பு: எம். ஆத்திமுத்து.

