நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் செப்டம்பர் 10 நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் நகராட்சி மூலதன மான்ய நிதியின் கீழ் பப்ளிக் ஆபீஸ் ரோடு மற்றும் அந்தோணியார் பள்ளி வடக்கு பகுதியில் ரூ.600 இலட்சம் மதிப்பீட்டில் 2.225 கி.மீ தொலைவு மற்றும் காடம்பாடி பகுதியில் ரூ.600 இலட்சம் மதிப்பீட்டில் 1.975 கி.மீ தொலைவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் , அரசு மருத்துவமனையின் பின்புறம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.200 லட்சம் மதிப்பீட்டில் 200 நபர்கள் அமரும் வகையில் பயிற்சி கூடம் மற்றும் திறன் மேம்பாட்டு நூலக கட்டடம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், நாகப்பட்டினம் ஊராட்சி ஒன்றியம் பாப்பாகோவில் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தினை பழுது நீக்கம் சமத்துவபுரம் திட்டத்தின் கீழ் ரூ.474.56 லட்சம் மதிப்பீட்டில் பழுது நீக்கம் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் 100 வீடுகளில் 93 வீடுகள் முற்றிலும் பழுதடைந்தும், 7 ஏழு வீடுகள் சிறு பழுதடைந்தும், குடிநீர் குழாய்கள் இல்லாமலும் விளையாட்டு மைதானம், பூங்கா பெரியார் சிலை, சமுதாயக்கூடம், நூலக கட்டடம், அங்கன்வாடி கட்டிடம், நியாய விலை கடை கட்டிடம் , நுழைவு வாயில் பழுது நீக்கம் போன்றவைகளை புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு பணிகள் நடைபெறுவதையும், வேளாங்கண்ணி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.142 லட்சம் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை கட்டடம் கட்டும் பணிகளையும், கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மழை தூவான் மற்றும் தெளிப்பு நீர் பாசன கருவி மூலம் நிலக்கடலை சாகுபடி செய்வதையும், தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கோவில்பத்து ஊராட்சி வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் உள்ள பெரப்பான்கன்னி குளம் ரூ.12.75 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரி மேம்பாடு செய்யும் பணிகளையும், மேலக்காடு கிராமத்தில் உள்ள அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.5.89 இலட்சம் மதிப்பீட்டில் மிதிவண்டி நிழலகம் கட்டும் பணிகள் நடைபெறுவதையும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம் தேத்தாகுடி தெற்கு ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.9.95 இலட்சம் மதிப்பீட்டில் பண்னைவெளி குளிரி குளம் தூர்வாரப்பட்டு கரைகளில் உள்ள புதர்கள் அகற்றும் பணி மற்றும் தார்சாலை உள்ள கரைகளில் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகளையும், வேதாரண்யம் நகராட்சி தோப்பு துறை மாரியம்மன் கோவில் தெருவில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.13.20 இலட்சம் மதிப்பீட்டில் 133 மீ தொலைவில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெறுவதையும், மருத்துவமனை சாலை பகுதியில் உள்ள உப்புகுளம் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, குளத்தின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் மற்றும் குளத்தை சுற்றிலும் கான்கீரிட் பிளாக் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

முன்னதாக கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் வேளாண்மை துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 100சத மானியத்தில் தென்னகன்றுகளையும், 50 சத மானியத்தில் தூய மல்லி நெல் விதைகளையும் பயனாளிகளுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர், குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அரசு செயலாளர் வீ.அருண்ராய் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் ஆகியோர் வழங்கினார்கள்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெ.பெரியசாமி வேளாண்மை துறை இணை இயக்குநர் ஜாக்குலா அகண்டராவ் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ.செல்வகுமார் நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் என்.ஸ்ரீதேவிரவி வேதாரண்யம் நகராட்சி ஆணையர் வி.ஹேமலதா வேதாரண்யம் நகராட்சி பொறியாளர் இப்ராஹிம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

