நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் வட்டம் அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளுர் வட்டம் அரசினர் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் வழங்கினார். தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர்.


மாண்புமிகு தமிழக முதல்வர் பள்ளி மாணவர்களின் நலனை கருதிற்கொண்டு பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். அவற்றில் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளுர் ஒன்றியம் மேல்நிலை பள்ளி மாணவ மாணவிகளுக்கு 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு ரூ.42,95,832 மதிப்பிட்டிலான 424 மாணவர்களுக்கு மாணவர் மிதிவண்டிகளும், 421 மாணவிகளுக்கு மிதிவண்டிகளும் வழங்கப்படுகிறது. ஆண் மிதிவண்டியின் விலை ரூ.5,175 பெண் மிதிவண்டியின் விலை ரூ.4,992 மொத்தம் 845 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது
மாணவ மாணவிகள் போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாணவர்கள் இருக்க வேண்டும். மாணவர்கள் செல் போன்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இருசக்கர வாகனங்களை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். ஏதேனும் விபத்துகள் ஏற்பட்டால் மாணவர்களின் குடும்பத்தை பாதிக்கும். இவை அனைத்தையும் தவிர்த்து படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்த வேண்டும்.
மாண்புமிகு முதலமைச்சர் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்க நிறைய திட்டங்களை கொண்டு வருகிறார்கள். ஆகவே படித்தால்தான் பெரிய வேலைகளில் அமர முடியும். நாடு வளர்ச்சி அடைவதில் முழு பங்கு மாணவ மாணவிகளிடம் தான் உள்ளது அதனால் இந்த வயதில் நல்ல ஒழுக்கம், நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து நன்றாக படித்து வாழக்கையில் நல்ல இடத்திற்கு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்தார்.
இவ்விழாவில் கீழ்வேளுர் பேரூராட்சி தலைவர் இந்திராகாந்தி சேகர் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர்.தசங்கர் கீழ்வேளுர் வட்டாச்சியர் ரமேஷ் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

