• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.

policeseithitv by policeseithitv
September 2, 2022
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

நாகப்பட்டினம் செப்டம்பர் 2

நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் அரசு மருத்துவ நிலையங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் திரு.மா.சுப்ரமணியன் திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் என்.கௌதமன் தாட்கோ கழக தலைவர் உ.மதிவாணன் நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர். ஜெ.முகமது ஷா நாவஸ் கீழ்வேளுர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. நாகைமாலி ஆகியோர் உடன் இருந்தனர்.

அதனைத்தொடர்ந்து மாற்றுதிறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.30 லட்சம் மதிப்பிட்டில் 10 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பிட்டில் 50 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் கூட்டுறவு துறை சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிட்டில் 5 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வேளாண்மை துறை சார்பில் ரூ.4,50,000 மதிப்பிட்டில் 6 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் 9 லட்சம் மதிப்பிட்டில் 11 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிட்டில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட தொழில் மையம் சார்பில் ரூ.10 லட்சம் மதிப்பிட்டில் 2 யனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் தாட்கோ சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பிட்டில் 2 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வருவாய் துறை சார்பில் ரூ.7,92,000 மதிப்பிட்டில் 63 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் ஒருங்கினைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.12 லட்சம் மதிப்பிட்டில் 12 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் தெரிவித்ததாவது

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக மருத்துவ துறையில் மக்களை தேடி மருத்துவம் இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் பல்வேறு நல்லதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 6 அரசு மருத்துவமனைகள் 3 தனியார் மருத்துவமனைகள் என மொத்தம் 9 மருத்துவமனைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை இத்திட்டத்தின் மூலம் 2051 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர். நடமாடும் மருத்துவம் காசநோய் இல்லா தமிழகம்தொழுநோய் இல்லா தமிழகம் போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

அதனைதொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு மானிய கோரிக்கையில் ரூ.35.46 கோடி மதிப்பீட்டில் அறிவிக்கப்பட்ட 15 அறிவிப்புகளின் படி நாகப்பட்டினம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவனையில் ரூ.13 இலட்சம் மதிப்பீட்டில் புதிய இரத்த சுத்திகரிப்பு இயந்திரம் மற்றும் நவீன உபகரணங்களையும் ரூ.5.26 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து பதிவுக்கான தரவுகளை பதிவுசெய்ய புதிய மென்பொருள்களையும் வேதராண்யம் தலைமை மருத்துவமனையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்துதல் பணி ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பச்சிளம் குழந்தைகளின் செவித்திறன் கண்டறிவதற்காக ஒளிப்புகா மற்றும் நவீன உபகரணங்கள் ரூ.34.5 இலட்சம் மதிப்பீட்டில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை மையங்களுக்கு நவீன உபகரணங்களையும் திருமருகல் மற்றும் கரியாப்பட்டினம் வட்டாரத்திற்கு ரூ.1.62 கோடி மதிப்பீட்டில் வட்டார பொது சுகாதார கட்டடங்கள்ரூ.1.95 கோடி மதிப்பீட்டில் 6 புதிய துணை சுகாதார நிலைய கட்டடங்கள் ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் திருப்பூண்டி தலைஞாயிறு திட்டச்சேரி மற்றும் வாய்மேடு ஆகிய பகுதிகளில் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள்ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் வேதாரண்யத்தில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய கட்டடத்தினையும் ரூ.6.23 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த அவசிய ஆய்வக சேவைகள்ரூ.42 இலட்சம் மதிப்பீட்டில் 30 துணை சுகாதார நிலையங்கள் நலவாழ்வு மையங்களாக தரம் உயர்த்துதல் போன்றவைகளை மாவட்டத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரசு மருத்துவமனைகள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றிற்கு பல்வேறு மருத்துவ கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளுர் அரசு மருத்துவமனையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.50 இலட்சம் மதிப்பீட்டில் மகப்பேறு கட்டடம் வேதாரண்யம் வட்டம் வாய்மேடு கிராமத்தில் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் பாலக்குறிச்சியில் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் துணை சுகாதார நிலைய கட்டிடம் போன்றவைகள் என மொத்தம் ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஊட்டச்சத்து மாதவிழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு கீழ்வேளுர் அரசு மருத்துவமனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் இரத்த சோகைக்கு எதிரான விழிப்புணர்வு வாகனத்தினையும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் ஊராட்சிகளில் ஊட்டச்சத்தை தூண்டுதல் என்ற விழிப்புணர்வு மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மாணவர் பேரவை பதவியேற்பு விழா மற்றும் தமிழ்மன்றம் துவக்க விழாவினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் துவக்கி வைத்து உரையாற்றினார்.

இவ்விழாவில் மாவட்ட ஊராட்சி தலைவர் ச.உமாமகேஸ்வரி வட்டார ஆத்மா குழு தலைவர்கள் ப.கோவிந்தராசன் க.அட்சயலிங்கம் ஒன்றிய குழு தலைவர் வாசுகி நாகராஜன் பேரூராட்சி தலைவர்.இந்திராகாந்தி சேகர் தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் கு.இராஜன் நாகப்பட்டினம் வருவாய் கோட்டாச்சியர் ந.முருகேசன் நாகப்பட்டினம் நகரமன்ற தலைவர் இரா.மாரிமுத்து மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி தொகுப்பு எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

Previous Post

வேதாரண்யத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் டார்ச் லைட் அடித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.

Next Post

நாகப்பட்டினம் மாவட்டத்தில் புதிய வேளாண் காடுகள் வளர்ப்புத் திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In