வேளாங்கண்ணி மாதா பேராலயத்தில் திரு கொடியேற்று விழா .
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 30
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில்
புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலய ஆண்டு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கீழ்த்திசை நாடுகளின் புனித லூர்து நகரம் என்று அழைக்கப்படும் பெருமைக்குரிய நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம் . இந்த ஆண்டிற்கான திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. முன்னதாக புனித ஆரோக்கிய மாதா உருவம் பொறிக்கப்பட்ட கொடி ஆலயத்தில் இருந்து ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியே எடுத்து வரப்பட்டு பின்னர் ஆலயத்தை வந்தடைந்தது. பின்னர் கொடியை தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் புனிதம் செய்து வைத்தார். பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடி உச்சியை அடைந்ததும் ஒரே நேரத்தில் ஆலயத்தின் விளக்குகள் ஏற்றப்பட்டு வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன
வாணவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது .இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

ஆண்டுப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி அடுத்த மாதம் ஏழாம் தேதி நடைபெறுகின்றது. ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு பத்து நாட்களும் நவநாள் ஜெபம், மாதா மன்றாட்டு கூட்டுப்பாடல் திருப்பலி, நற்கருணை ஆசீர்வாதம்கொங்கணி மலையாளம் ,தெலுங்கு ,இந்தி ,கன்னடம் ஆகிய மொழிகளில் திருப்பலிகள் நடைபெறுகின்றன.


செய்தித் தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

