நாகப்பட்டினம் ஆகஸ்ட் 27
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தந்தை பெரியார் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தகவல்
சமூக நீதிக்காக பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” 1995 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000 (ரூபாய் ஐந்து லட்சம் மட்டும்) விருது தொகையும்ஒரு சவரன் தங்கப்பதக்கமும், தகுதியுரையும் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.
2022 ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் “சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது” வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பம் தங்களின் சுயவிவரம், முழுமுகவரி, தொலைபேசி எண் ஆகியவற்றுடன் 31.10.2022-க்குள் நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் தெரிவித்துக்கொள்கிறார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

