தூத்துக்குடி மாநகராட்சியில் மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றினார்.
தூத்துக்குடி,ஆகஸ்ட், 15
தூத்துக்குடி 75வது சுதந்திரதின அமுத பெருவிழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவிற்கு மாநகராட்;சி ஆணையர் சாருஸ்ரீ தலைமை வகித்தார். செயற்பொறியாளர் ரூபன் சுரேஷ்பொன்னையா வரவேற்புரையாற்றினார்.
மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தேசிய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கினார். பின்னர் சிறப்பாக பணியாற்றிய தூய்மை பணியாளர்கள் அரசு அலுவலர்கள் 60 பேருக்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
விழாவில் துணை மேயர் ஜெனிட்டா, மாநகராட்சி மண்டலத்தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, அன்னலட்சுமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், உதவி ஆணையர்கள் சேகர், தனசிங், காந்திமதி, ராமசந்திரன், நகர்நல அலுவலர் அருண்குமார்,
கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், சரவணக்குமார், தெய்வேந்திரன், இசக்கிராஜா, கண்ணன், ராமர், வைதேகி, நாகேஸ்வரி, ஜெயசீலி, மரியகீதா, அந்தோணி பிரகாஷ்மார்ஷல், ராஜேந்திரன், விஜயகுமார், பவாணி மார்ஷல், பொன்னப்பன், ராஜதுரை, முத்துவேல், பேபி ஏஞ்சலின், மெட்டில்டா, அதிஷ்டமணி, ரெங்கசாமி, ஜான்சிராணி, ஜாக்குலின்ஜெயா, ரிக்டா, ராமகிருஷ்ணன், தூய்மை பணியாளர்கள் அனைவருக்கும் அருசுவை உணவு வழங்கப்பட்டது. திட்ட பொறியாளர் ரங்கநாதன் நன்றியுரையாற்றினார். அதனைத் தொடர்ந்து
நான்கு மண்டல அலுவலகங்களிலும் மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, நிர்மல்ராஜ், கலைச்செல்வி, அன்னலட்சுமி, ஆகியோர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்.

மாப்பிள்ளையூரணி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சரவணக்குமார் தேசீய கொடியேற்றி வணங்கி இனிப்புகள் வழங்கி தூய்மை பணியாளர்களை கௌரவித்தார். விழாவில் துணைத்தலைவர் தமிழ்செல்வி, வட்டார வளர்ச்சி உதவி அலுவலர் மகேஸ்வரி, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் பாரதிராஜா, தங்கமாரிமுத்து, பெலிக்ஸ், ஸ்டாலின், வசந்தகுமாரி, தங்கபாண்டி, மகேஸ்வரி, ஜுனத்பீபி, பாலம்மாள், சக்திவேல், பாண்டியம்மாள், கதிர்வேல், உமாமகேஸ்வரி, ஜேசுராஜா, ஒன்றிய கவுன்சிலர் பாலன், ஊராட்சி செயலாளர் ஜெயக்குமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட்டில் கீழுர் கூட்டுறவு வங்கி தலைவர் சி.த.சு ஞான்ராஜ் தேசீய கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலாளர் நியூட்டன் துணைமேலாளர் ரவி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

