இயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வு கூட்டம் – அமைச்சா் மெய்யநாதன் தலைமையில் நடந்தது.
நாகை ஆக 6
நாகப்பட்டினம் மாவட்டத்தில் இயற்கை பேரிடர் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆய்வு
கூட்டம் சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில் நடந்தது. மாவட்ட ஆட்சியர்
டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர்
கௌதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர்
எம்.எல்.ஏ நாகை மாலி முன்னிலை வகித்தனர்.
பின்னர் இளைஞர் நலன் விளையாட்டு
மேம்பாட்டுத்துறை அமைச்சர் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் உத்திரவுக்கிணங்க மேட்டுர் மற்றும் கல்லணையில் உபரி நீர் திறந்து விடப்பட்டதையடுத்து 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி வாயிலாக நேற்றைய தினம் கூட்டம் நடத்தினார்கள். அதில் இரவு நேரங்களில் உபரிநீரை வெளியேற்றக்கூடாது எனவும், பகல் நேரங்களில் உபரிநீரை வெளியேற்றி அவற்றை
கண்காணித்திடவும் அறிவுறுத்தினார். அதனடிப்படையில் இன்றைய தினம் நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகிறது தாழ்வான பகுதிகள் எவை என கண்டறிந்து அப்பகுதிகள் பாதிக்கபடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்படும் காலகட்டத்தில் புயல், வெள்ளம் போன்ற இயற்கை இடர்பாடுகளை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை
அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.
முன்னதாக வெள்ளப்பெருக்கால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள தீயணைப்பு துறை, காவல்துறை சார்பில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த இரப்பர் படகு, மரம் வெட்டும் இயந்திரம்
போன்ற உபகரணங்களை சுற்றுசூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் டாக்டர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன், தாட்கோ கழக தலைவர் மதிவாணன், கீழ்வேளுர்
எம்.எல்.ஏ நாகை மாலி ஆகியோர் பார்வையிட்டனர்.



கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி ஜவகர், மாவட்ட வருவாய் அலுவலர்
ஷகிலா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பெரியசாமி, நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உட்பட அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளா்

