வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டடங்கள்
கட்டிய இடத்தை
இந்து சமய அறநிலையத் துறையினர் கையகப்படுத்தினர்.
வேதாரணியம் ஆகஸ்ட் 3
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலத்தில் அருள்மிகு ருத்ர லிங்கேஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன.
கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்த இடத்தை இன்று இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் பி.ராணி தலைமையில் ஆய்வாளர் ராமதாஸ் செயல் அலுவலர் தினேஷ் சுந்தர்ராஜன் குழுவினர்
அந்த இடத்தில் இருந்த 7 கடைகள் மற்றும் 32 சென்ட் நிலத்தை கையகப்படுத்தி கடைகளுக்கு சீல் வைத்தனர். தனியாரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட கோயிலுக்கு சொந்தமான அந்த இடத்தின் மதிப்பு ரூபாய் 25 லட்சம் ஆகும்.
வேதாரணியம் கோயில் அதிகாரிகளும் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

