நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
நாகப்பட்டினம் ஆகஸ்ட் 01
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண்தம்புராஜ் தலைமையில் இன்று நடைபெற்றது.
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வங்கி கடன் மற்றும் உதவித்தொகை குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு ,கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 201 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து நாகப்பட்டினம் வட்டம்
கொட்டுப்பாளைத் தெரு என்ற முகவரியை சேர்ந்த மு.நெளசாத்பேகம் என்பவருக்கு சுயதொழில் செய்வதற்காக மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து ரூபாய் 24000 மதிப்பீட்டில் மின் தையல் இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அருண்தம்பு ராஜ் வழங்கினார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வி.ஷகிலா சமூக பாதுகாப்பு துணை ஆட்சியர் கு.ராஜன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
மீ. செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

