வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பிகே சேகர்பாபு இன்று ஆய்வு செய்தார்.
வேதாரணியம் ஜூலை 29
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் ஔவையார் மணிமண்டபம் கட்டுவதற்கான இடத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் J. குமரகுருபரன் மாவட்ட ஆட்சித்தலைவர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என். கௌதமன்
ஆகியோர் உடன் இருந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் துளசியாப்பட்டினம் கிராமத்தில் அருள்மிகு ஔவையார் விஸ்வநாத சுவாமி திருக்கோயில் உள்ளது.இத்திருக்கோயில் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
இத்திருக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் ஔவை விழாவானது கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த விழாவை 2004 ஆம் ஆண்டுக்கு முன்னர் கிராம மக்கள் நன்கொடை வசூல் செய்து 3 முதல் 6 நாட்கள் வரை கொண்டாடப்பட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக விழாவை இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 2005ஆம் ஆண்டு முதல் இரண்டு நாட்கள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ தொற்று பாதிப்பு காரணமாக விழா நடத்தப்படாமல் தற்போது கடந்த மார்ச் மாதம் நடைபெற்றது.வேதாரண்யம் வட்டம் துளசியாப்பட்டினம் ஔவையார் அவர்களுக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும் என்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் உத்தரவிடப்பட்டு அதன் அடிப்படையில் மணி மண்டபம் கட்டுவதற்கான இடத்தை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் உதவி ஆணையர் இந்து சமய அறநிலைத்துறை ப.ராணி
மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

