தமிழகத்தில் குட்கா, கஞ்சா, போன்ற போதை பொருள்களை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக சார்பில் தூத்துக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தூத்துக்குடி,
ஜூலை, 30.
தமிழகத்தில் கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தால் இளைஞர்கள், மாணவர்கள் வாழ்க்கை சீரழிந்து வருகிறது. இதனை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் தமிழகத்தில் போதை பொருளை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாமக நிறுவனர் ராமதாஸ், மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஆணைக்கிணங்க தமிழகம் முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி சிதம்பர நகர் பஸ் ஸ்டாப் பாளை ரோடு
அருகில் பாமக மத்திய மாவட்ட செயலாளர் சின்ன துரை தலைமையில் மாநகரச் செயலாளர் லட்சியப் பாதை கணேசன் வரவேற்பு உரை ஆற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கண்டன சிறப்புரை ஆற்றினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பாமக மத்திய மாவட்ட நிர்வாகிகள் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர் இளைஞர்கள் பெண்கள் உட்பட சுமார் 400 க்கு மேற்பட்டோர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களை சந்தித்த வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் கூறியதாவது தமிழகம் முழுவதும் போதைப்பொருள் புழக்கத்தில் இருந்தாலும் தூத்துக்குடியில் மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் புழக்கத்தில் உள்ளது குறிப்பாக இலங்கைக்கு தூத்துக்குடி கடல் மார்க்கமாக தொடர்ந்து போதை பொருள் கடத்துவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன இதனை முழுமையாக கட்டுப்படுத்த மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் தலைமையில் போதைப் பொருளை முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக தெரிவிப்பது என கேட்டுக்கொண்டார்
தமிழகத்தில் போதை பொருளை முற்றிலுமாக ஒழிக்க வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மத்திய மாவட்ட செயலாளர் சின்னத்துரை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் லட்சிய பாதை கணேசன் வரவேற்புரை ஆற்றினார் வடக்கு மாவட்டச் செயலாளர் ஜி ராமச்சந்திரன் சிறப்புரையாற்றினா இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், இளைஞர்கள் உட்பட சுமார் 400 மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

