வேதாரண்யத்தில் நாகை மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்சார பெருவிழா
வேதாரண்யம் ஜூலை 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் நாகை மின் பகிர்மான வட்டம் நடத்தும் மின்சார பெருவிழா
ராஜாஜி பூங்காவில் இன்று மாலை ஐந்து மணிக்கு நடைபெற்றது . இந்திய சுதந்திரத்தின் 75ஆம் வருடத்தைக் கொண்டாடும் சுதந்திரத்தின் அமுத பெருவிழாவின் ஒரு பகுதியாக மின்சார அமைச்சகம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் கிராமிய மின்மயமாக்கல் கழகத்தோடு இணைந்து தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்த மின்சார பெருவிழாவை நடத்த ஏற்பாடு செய்தது.மின்சார பெருவிழா மாநிலம் மற்றும் மத்திய அரசுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பு செயல்பாட்டை எடுத்துக்காட்டவும் மின் துறையின் சாதனைகளை பறைசாற்றும் உதவும் ஒரு தளமாகும்.
மின்சார பெருவிழாக்கள் நாடு முழுவதும் ஒளிமயமான இந்தியா ஒளிமயமான எதிர்காலம் பவர் @2047 என்ற திட்டத்தின் கீழ் அதிகமான பொதுமக்கள் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்துடன்
மற்றும் மின்சார துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் பற்றிய செய்திகளை குடி மக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற அடிப்படையிலும் கொண்டாடப்படுகின்றது.



வேதாரண்யத்தில் நடந்த மின்சார பெருவிழாவில் க.சதீஷ்குமார் மாவட்ட நோடல் அலுவலர்
வரவேற்புரை ஆற்றவும் வேதாரணியம் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் அவர்கள் தலைமை ஏற்க வேதாரணியம் நகர்மன்றத் தலைவர் மா.மீ .புகழேந்தி, சு.சதீஷ்குமார் மேற்பார்வை பொறியாளர் நாகை மின் பகிர்மான வட்டம், வாழ்த்துரை
வழங்கினார்கள்.வேதாரணியம் பாரதிதாசன் உறுப்பு கல்லூரி முதல்வர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.வேதாரணியம் பாரதிதாசனார் உறுப்புக் கல்லூரியின் மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது .இறுதியில் கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பாரதிதாசனார் உறுப்புக் கல்லூரியின் மாணவ மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்
வழங்கப்பட்டன. இறுதியில் அ.சேகர் செயற்பொறியாளர் நாகப்பட்டினம் கோட்டம் நன்றி உரை ஆற்றினார்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடாநாகை மாவட்ட செய்தியாளர் .

