கெலமங்கலம் கிராம தேவதை அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது.
ராயக்கோட்டை, ஜூலை, 29
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலத்தில் உள்ள கிராம தேவதையான அருள்மிகு ஸ்ரீ பட்டாளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை பூஜைகள் நடைபெற்றது.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது
ஸ்ரீ பட்டாளம்மன் திருக்கோவில் ஆகும்
இப்பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது
இதனை அடுத்து பட்டாளம்மன் மற்றும் மாரியம்மனுக்கு பூ அலங்காரம் செய்து பல்லக்கில் அமர்த்தி தீப ஆராதனைகள் செய்தனர்.
பின்னர் பக்தர்களுக்கு தீர்த்தபிரசாதங்கள் வழங்கினர்
விழாவில் நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அதில் சில பக்தர்கள் அழகு குத்தி, தீச்சட்டி, கஞ்சி செட்டி, மற்றும் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர்.இந்த ஊர்வலமானது அம்மன் கோயில் வளாகத்தில் தொடங்கி நகர முக்கிய வீதிகளான கணேச காலனி முதல் கூட்ரோடு வரை சென்று அண்ணாநகர் வழியாக கோயிலை வந்தடைந்தனர்.
இவ்விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதேபோல் அண்ணா நகர் முருகன் கோவில் பக்தர்கள் முதுகில் அழகு குத்தியபடி எஸ்கார்ட் எந்திரத்தில் சத்ரபதிசிவாஜி உருவப்படத்தை வைத்து தொங்கிக் கொண்டே நேர்த்தி கடனை செலுத்தினர்.
இவர்கள் நகர முக்கிய வீதிகளில் மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்து தீர்த்த பிரசாதங்களை பெற்றுக் கொண்டு சென்றனர். கெலமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தலைமையிலான காவலர்கள் விழாவிற்கு வந்த பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் எந்த போக்குவரத்து இடையூறும் இல்லாமல் பாதுகாப்பு வழங்கினர்.

