வேதாரண்யம் தனியார் பள்ளியில் காலை உணவு சாப்பிட்ட 60 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்: அரசு மருத்துவமனையில் அனுமதி, எஸ்.பி ஜவகர் நேரில் விசாரணை !
வேதாரண்யம் ஜூலை, 28.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அரசு உதவி பெறும் பெண்கள் தனியார் மேல்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இங்கு விடுதியில் பல மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இன்று காலை விடுதியில் மாணவிகளுக்கு கோதுமை உப்புமா வழங்கப்பட்டுள்ளது. சாப்பிட்ட சிறிது நேரத்தில் விடுதி மாணவிகளுக்கு திடீரென ஒருவருக்கு பின் ஒருவராக வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
அப்போது மாணவிகள் சாப்பிட்ட கோதுமை உப்புமாவில் பல்லியின் சிறுபாகம் கிடப்பதைப் மாணவிகள் பார்த்துள்ளனர். என்றும் கூறப்படுகிறது. உடனடியாக பாதிக்கப்பட்ட மாணவிகளை வேதாரணியம் அரசு மருத்துவமனைக்கு பள்ளி நிர்வாகம் அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தெரிய வர பதறி அடித்து மாணவியரின் பெற்றோர் உறவினர்கள் அரசு மருத்துவமனையில் குவிந்தனர்.



இதனால் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரே நேரத்தில் 60 மாணவிகள் வாந்தி, மயக்கமடைந்த நிகழ்வு பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வந்த நிலையில் நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உடனடியாக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு ஆறுதல் கூறினார். இதைப் பற்றி தகவல் அறிந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் ,சுகாதார அதிகாரிகளும் உடனடியாக பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி வளாகத்திலும் அரசு மருத்துவமனை வளாகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர் இந்த சம்பவம் நாகை மாவட்டம் வேதாரணியத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அதிகாரிகளின் விசாரணையில் மாணவிகள் வாந்தி மயக்கம் ஏற்பட காரணம் என்ன என்பது தெரியவரும்
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

