வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடல்களில் ஏராளமான மக்கள் புனித நீராடினர்.

வேதாரணியம் ஜூலை 28
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை மற்றும் வேதாரணியம் சன்னதி கடலில் ஆயிரக்கணக்கான மக்கள் புனித நீராடினர்.ஏராளமான மக்கள் முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்
கோடியக்கரை மற்றும் வேதாரணியம் கடற்கரைகளில் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
மருத்துவத் துறையினரும் மருத்துவ முகாம்களை அமைத்து இருந்தனர்.கடலில் நீராடிய மக்கள் பின்பு வேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள மணிகர்ணிகை குளத்தில் புனித நீராடி
பின் சுவாமி தரிசனம் செய்தனர்.
திருக்கோயிலிலும் காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்தனர். சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாம்களை அமைத்து இருந்தனர்.வேதாரணியம் அரசு போக்குவரத்து துறையினர் வேதாரண்யத்தில் இருந்து கோடியக்கரை மற்றும் மற்ற ஊர்களுக்கு பேருந்துகளை தொடர்ந்து இயக்கி வருகின்றனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர் .

