வேதாரண்யத்தை அடுத்த கோடிக்கரை கடற்கரையில் கரை ஒதுங்கிய ரப்பர் படகில் வந்த போலந்த நாட்டைச் சேர்ந்தவர் கைது.
வேதாரணியம் ஜூலை 25
நாகை மாவட்டம் வேதாரணியம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயத்தை ஒட்டி உள்ள முனைக்காடு கடற்கரையில் நேற்று காலை ஆள் இல்லாமல் ரப்பர் படகு ஒன்று கரை ஒதுங்கியது. தகவல் அறிந்த கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் நாகை, திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சை சரக டிஐஜி உள்ளிட்டோர் படகை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். படகில் யாரேனும் வந்தார்களா என்பது குறித்து மோப்பநாய் கொண்டு தடயங்களை வைத்து தேடும் நடைபெற்றது.

மேலும் டிரோன் மூலமும் கண்காணிப்பு நடைபெற்றது. இதனிடையே நேற்று இரவு வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டு துறை பகுதியில் ஒருவர் சந்தேகத்திற்குரிய முறையில் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்து அந்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர் . அவர் போலந்து நாட்டைச் சேர்ந்த வாடட்ஸ்மே என்றும் இலங்கை சென்ற போது அங்கு ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டதும் இந்தப் படகை விலைக்கு வாங்கி இப் பகுதிக்கு வந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வருகிறது . எதற்காக இந்திய எல்லைக்குள் ஊடுருவினார் என்பது தெரியவில்லை. பாஸ்போர்ட் இல்லாமல் இந்திய எல்லைக்குள் ஊடுருவியதாக இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

