டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு – நாகை மாவட்டத்தில் 82 மையங்களில் நடைபெறுகிறது.
வேதாரணியம் ஜூலை 24
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு தமிழகம் முழுவதும் (24.07.2022) இன்று நடைபெறுகிறது .தமிழகம் முழுவதும் 7689 மையங்களில் 22 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7 பதவிகளுக்கான 7301 பணியிடங்களுக்கு இத் தேர்வு நடைபெறுகிறது. இளநிலை உதவியாளர் ,கிராம அலுவலர் ,தட்டச்சர்,நில அளவையர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு டி என்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கி மதியம் 12. 30 மணி வரை நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் மையங்களில் சிசிடிவி மற்றும் வீடியோ பதிவு மூலம் கண்காணிக்கப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் 82 மையங்களில் இத்தேர்வு நடைபெறுகிறது.


நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் 36 மையங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெறுகிறது .வேதாரணியம் வட்டாரத்தில் 7500 பேர் இத்தேர்வை எழுதுகிறார்கள்.தேர்வு எழுதும் மையங்களில் காவல்துறையினர்
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

