நாகை மாவட்டத்தில் குரூப் 4 தேர்வுக்கான முன்னேற்பாடுகள் – மாவட்ட ஆட்சியா் அருண்தம்புராஜ் தகவல்
நாகை ஜூலை 23
நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்வரும் 24.7.2022 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு–4 (தொகுதி–4) பதவிகளுக்கான தேர்வில் நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம், திருக்குவளை ஆகிய நான்கு வட்டங்களில் சுமார் 82 மையங்களில் 20,450 நபர்கள் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுகள் சிறப்பாக நடைபெற நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம், திருக்குவளை ஆகிய நான்கு வட்டங்களுக்கும் தலா ஒரு துணைஆட்சியர் நிலையில் தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் . 82 முதன்மைக் கண்காணிப்பாளர்களும், 4 பறக்கும் படை அலுவலர்களும், 18 சுற்றுகுழு அலுவலர்களும், 82 ஆய்வு அலுவலர்களும், 86 வீடியோ கிராபர்;களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வில் கலந்து கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் தேர்வு எழுதும் வசதியும் மற்றும் பார்வையற்றோர் தேர்வு எழுதிட மாற்று நபர் தனி அறைகள் கொண்ட வசதியும், ஒவ்வொரு தேர்வுக் கூடங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது எனவும், ஒவ்வொரு தேர்வு கூடங்களிலும் தனித்தனியாக காவலர்கள் பாதுகாப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளனர்



தேர்வு எழுதுபவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் போக்குவரத்து உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் அலைபேசி மற்றும் இதர பொருட்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது மேலும், தேர்வர்கள் கோவிட் பாதுகாப்பு விதிமுறைகளை தவறாது பின்பற்றவேண்டும் எனவும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அருண்தம்புராஜ் தெரிவித்துள்ளார்.
செய்தி தொகுப்பு
டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா,
நாகை மாவட்ட செய்தியாளர்

