நாகப்பட்டினம் மாவட்ட காவல் துறையின் சார்பில் கிராமப்புற பள்ளி மாணவ மாணவிகளின் நலன் கருதி சீரமைக்கப்பட்ட படிப்பகம் திறப்பு விழா.
நாகப்பட்டினம் ஜூலை 22
நாகப்பட்டினம் மாவட்டம்
வலிவலம் காவல் சரகம் இறையான்குடி கிராமத்தில் சீரமைக்கப்பட்ட குழந்தைகள் படிப்பகத்தை நாகை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவஹர்இன்று 22.07.2022 திறந்து வைத்தார்கள்.
பின்னர் அவர் உரையாற்றும் போது நூலகத்தின் அவசியம் மற்றும் மாணவர்களுக்கான வாழ்வியல் நெறிமுறைகள் குறித்து பேசினார்கள். அதனைத்தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு புத்தக பைகளை வழங்கினார்.
இந்நிகழ்விற்கு ஊராட்சி மன்ற தலைவர் டி.சேகர் தலைமை வகித்தார்.ஒன்றிய கவுன்சிலர் லென்சோயாசிவபாதம் முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் எஸ்.அன்பழகன் வரவேற்பு வழங்கினார்.


இதில் நாகை மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன், பயிற்சி
துணை காவல் கண்காணிப்பாளர் கீதா, கீழ்வேளூர் காவல் ஆய்வாளர் சோமசுந்தரம்,உதவி ஆய்வாளர் சரவணன், பள்ளி ஆசிரியர் மா.முருகையன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.இறுதியாக கிராம நிர்வாக அலுவலர் கே.பாலமுருகன் நன்றியுரை
ஆற்றினார்.
இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செய்தி தொகுப்பு டாக்டர் எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட செய்தியாளர்.

