சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் 21.07.2022 தொடங்கிவைத்தார்.
நாகப்பட்டினம் ஜீலை 21
சென்னை மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள 44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியானது தமிழகத்தில் முதன்முறையாக 28.07.2022 தொடங்கி 10.08.2022 வரை நடைபெறுகிறது.
அதனையொட்டி நாகப்பட்டினம் மாவட்டத்தில் 21.07.2022 நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனித உருவிலான போட்டியினை தொடங்கிவைத்தும், நாகப்பட்டினம் புதிய பேருந்து நிலையத்தில் அரசுபேருந்துகளில் விளம்பர பதாகைகளை ஒட்டியும், ஆட்சியர் அலுவலக முகப்பு சுவற்றில் ஒவியங்கள் வரைந்தும், நாகப்பட்டினம் ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு பேரணியினை தொடங்கி வைத்தும், தலைஞாயிறு பேரூராட்சி அலுவலக கட்டிட முகப்புத் தோற்றத்தில் செஸ் பலகை போன்று வடிவமைக்கப்ட்டுள்ளதை பார்வையிட்டும், தலைஞாயிறு அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் செஸ் பலகை வரைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றதை பார்வையிட்டும் மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ 21.07.2022 விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.



இந்நிகழ்ச்சிகளில் மண்டல பொதுமேலாளர் அரசு போக்குவரத்துகழகம் கே.எச்.மகேந்திரக்குமார், துணைமேலாளர்கள் சிதம்பரக்குமார், சங்கர் மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா தலைஞாயிறு பேரூராட்சி செயல் அலுவலர் குகன் அவர்கள் ஏ.டி.எம் மகளிர் கல்லூரி முதல்வர் அன்புசெல்வி ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

