நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டபணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் இன்று 19.07.2022 ஆய்வு மேற்கொண்டார்.
நாகப்பட்டினம் ஜூலை 19
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் கட்டுமாவடி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதித் திட்டத்தின் கீழ் கட்டுமாவடி பாசன வாய்க்காலில் நடைபெறும் தூர்வாரும் பணிகளையும், அங்கன்வாடி கட்டிட கட்டுமான பணிகளையும், நடுக்கடை கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் வீடு கட்டும் கட்டுமான பணிகளையும், திருமருகல் ஊராட்சி ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கோட்டூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் சத்துணவுக்கூடம் கட்டுமான பணிகளையும், அங்காடி கட்டடம் கட்டுமான பணிகளையும், கீழப்பூதனூர் ஊராட்சி பெருநாட்டான் தொப்பு கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும், பில்லாளி ஊராட்சியில் அமிர்தகுளம் அமைக்கும் பணிகளையும், பனங்குடி ஊராட்சி சமத்துவப்புரத்தில் வீடு கட்டுமான பணிகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்.
முன்னதாக சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறுவதையொட்டி நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செஸ் ஒலிம்பியாட் ஒட்டுவில்லைகள் பொருத்தப்பட்ட பள்ளி, கல்லூரி வாகனங்களின் விழிப்புணர்வு பணிகளை கொடியசைத்து தொடங்கிவைத்து போக்குவரத்து வாகனங்களில் செஸ் ஒலிம்பியாட் ஒட்டுவில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.அருண்தம்புராஜ் தொடங்கிவைத்தார்.




இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைதிட்ட இயக்குநர். பெ.பெரியசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் கே.பழனிசாமி, வட்டாரவளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், பார்த்திஆரோக்கியமேரி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
செய்தித் தொகுப்பு: டாக்டர். எல்விஸ் லாய் மச்சோடா நாகை மாவட்ட செய்தியாளர்.

