“தமிழ்நாடு நாள்” கொண்டாட்டம்
நாகப்பட்டினம் ஜீலை 18
தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அப்போதைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18 ஆம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டிருந்தது.
அதன் அடிப்படையில் இன்று நாகை மாவட்டம் ஒரத்தூர் சிதம்பரனார் நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மிகப்பெரிய அளவில் (36 அடி x 20 அடி) தமிழ்நாடு வரைபடத்தை மாணவர்கள் சிறு சிறு கற்களாலும் இலைகளாலும் பூக்களாலும் வரைந்து அதனை அழகு படுத்தினர்.
2021 டிசம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசு உத்தரவின் படி மணோன்மணியம் சுந்தரனார் அவர்கள் இயற்றிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலே தமிழ்நாட்டின் பாடலாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் வரைந்த தமிழ்நாட்டு வரைபடத்தை சுற்றி நின்று அந்தப் பாடலை மாணவர்கள் குழுவாக பாடி தமிழ்நாடு வாழ்க என்று கோஷமிட்டனர்.
செய்தி தொகுப்பு
DR.எல்விஸ் லாய் மச்சோடா
நாகை மாவட்ட
செய்தியாளர்.

